மத்தியப் பிரதேசத்தில், ஆசிரியர் ஒருவர் தன்னிடம் டியூஷன் படிக்க வந்த 5 வயது சிறுமியை கன்னத்தில் அறைந்து, கையை உடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலில், பிரயாக் விஸ்வகர்மா என்பவர் 5 வயது சிறுமி ஒருவருக்கு பள்ளி நுழைவுத் தேர்வுக்காக டியூஷன் எடுத்து வருகிறார். இந்த நிலையில்,
ஆசிரியர் சிறுமியிடம் "பேரட்" என்று வார்த்தையின் உச்சரிப்பைக் கேட்டுள்ளார். சிறுமி சரியாக உச்சரிக்காததால் அவரை கன்னத்தில் அறைந்து, கையை முறுக்கி அடித்துள்ளார். வலி தாங்க முடியாமல் கதறிய சிறுமி இதனை பெற்றோரிடம் கூறியுள்ளார். அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, சிறுமியை எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. இந்த நிலையில், சிறுமியின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்ததன் பேரில், டியூஷன் ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.